செவ்வாய், 23 மார்ச், 2021

மண்ணில் சிறந்தது - சோலச்சி

மனிதனும் மண்ணும்
இரண்டற கலந்தது என்பேன் மனிதனைப் பிரிந்து மண்ணும்
மண்ணைப் பிரிந்து மனிதனும்
வாழ்வது எளிதன்றோ..?

மனித நாகரிகத்தின் முதன்மையானது சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம் தொடர்வதில்
முதன்மையானது பானை...


பானை கண்டறியப்பட்ட பிறகுதான்
மனிதன் நிலைத்து வாழ்ந்தான்
நிலைத்து வாழ்தலின் தொடர்ச்சியால்
உழைத்து வாழ கற்றுக்கொண்டான்
உழைப்பின் வளர்ச்சியால்
உழவை கற்றுக்கொண்டான்....

பானையை சிறியதாய் செய்து
சோத்துப்பானை ஆக்கிக் கொண்டான்

கொஞ்சம் பெரியதாய் செய்து
தண்ணீர் பானை ஆக்கிக்கொண்டான்

மேலும் பெரியதாய் செய்து
குதிராக்கிக் கொண்டான்....

மனிதனின் வளர்ச்சியில்
பானையின் பங்கு அளப்பரியது

பானையில் சமையல் கெட்டுப் போகாது
மனித வளர்ச்சி என்பது
பானையை தொட்டே போவது....

பழைய கஞ்சியானாலும்
சோத்துப்பானைக் கஞ்சி சுகமானது

மனிதனின் தொடக்கத்தில் பனிக்குடம்
மரணத்தின் இறுதியில் பானைக்கடம்....

பகைவரையும் குளிர்விக்கும் பானை
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கட்டும் பானை....

மண்ணில் சிறந்தது களிமண்
மற்ற மண்ணில் தானியங்கள் பயிராகும்

களிமண்ணில் மட்டுமே பானைகள் உருவாகும்...

பானை இரத்தத்தோடு கலந்தது
இரத்தத்திற்கு பானையே உகந்தது

அதனால்தான்
களிமண் என்றே திட்டுகிறோம்

பானை மனிதனின் அடையாளம்
கீழடியில் கண்டதும் பானை
கீழே விழாமல் காப்பதும் பானை...

உரக்கச் சொல்லுங்கள் பானை பாராளும்
பானையால் வாழ்வு நீளும்...
                           

                                 - சோலச்சி