02.05.2026 புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த மூன்றாம் ஆண்டு அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அவர்களின் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்திருந்தார் பேரன்புக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்கள். அவரது “கூத்தின் சுவாசம்” என்கின்ற நாவல் விருது பெற்றது. அந்த விருதை பெறுவதற்காக திருவில்லிபுத்தூரில் இருந்து வருகை புரிந்த அண்ணன் அவர்களிடம் எனது “ஆப்பையால ஒரு அடி” கவிதை நூலை வழங்கியிருந்தேன். அந்த நூலினை வாசித்து மதிப்புரையும் வழங்கி இருக்கின்றார்கள். அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
-சோலச்சி
இதோ அந்த மதிப்புரை........
அப்பாையால ஒரு அடி.
இந்த கவிதைப் புத்தகத்தின் பேரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா.
இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் இந்த அப்பாதைதான் அலங்கரிக்கிறது. இதை இந்தத் தலைமுறை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இனி கொஞ்ச காலந்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய சட்டி பானை தட்டு கரண்டி இது எதுவும் இருக்காது.
காலை மாலை இரவு இப்படி மூன்று நேரமும் உணவகத்திலிருந்து பார்சல் வரும், அதை அவரவர் பிரிச்சுச் சாப்பிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இரவும் அத சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கலாம். அந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமிக்க துவங்கிவிட்டது. இதிலே வேடிக்கை என்ன வென்றால் இப்படிச் சமையலே செய்யாமல் வெட்டிப் பொறனியாகப் பேசி இப்படி மூணு தேரமும் வாங்கிச் சாப்பிடுகிற குடும்பத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குடும்பங்கள் இருக்கும் அவர்களை மற்றவர்கள் இது கடைக்காட்டு பிறக்கித் தின்னுட்டு திரியுதுக.. இவங்ககிட்ட எவ்வளவு சொத்து இருந்தாலும் தங்குமா அப்படி என்பார்கள். இன்றைக்கு எல்லாக் குடும்பத்திலும் இந்தக் கலாச்சாரம் பரவ ஆரம்பித்துவிட்டது. இது சமூகத்தின் அவலம். நோய் நொடிகளைத் தானே வரவழைத்துக் கொள்வது.. பிறகு அய்யோ அம்மா எனக் கத்துவது. இந்த சமூகத்தை அப்பாயாலே அடிக்க வேணும் போல இருக்கிறது.
தேடுகிறேன்
அந்த அப்பா சொல்கிறது
என்னைத் தூக்கி எறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான் என்னையே மறந்துவிட்டேன்
என்னைப்போய்த் தேடுகிறாயே என்கிறது.
அகப்பை என்ற சொல்தான் அப்பா என்று வட்டார வழக்கில் மருவியது. அது ஒரு தேங்காய் மூடி கொண்டு செய்யப்படும் கரண்டி.
இப்படி ஒரு கவிதைத் தலைப்பைப் பார்த்தவுடனே ஒரு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. இதில் என்னமோ இருக்கிறது புத்தகத்தைத் திறக்கத் தோன்றுகிறது.
உள்ளே போனால் மடை திறந்த வெள்ளம் போல சாதியால் மதத்தால் அரசியலால் இந்த நாடு இத்தனை நூற்றாண்டுகளாகியும் எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதற்கு காரணமானவர்களையும் வறுத்தெடுக்கிறார் இந்த நூலாசிரியர். இது மட்டுமல்ல குடும்ப உறவு காதலையும் மையப்படுத்தி எழுதியுள்ளார்.
சமூக அறம் அறச் சீற்றம் நிறைந்து நிற்கிறது இந்த நூலில். அதுதான் ஒரு எழுத்தாளனின் அறம்.
நான் புதுக்கோட்டை செல்லும்போது திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை வரை உள்ள ஊர்ப் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் அத்தனையும் அழிக்கப்பட்டிருநதன. பார்த்து மகிழ்ச்சி என் கண்களில் பூத்தது.
அதற்கு யாராவது ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதற்கு இந்தக் கவிதைகூட காரணமாக இருக்கலாம்
ஹாட் டாட்டில்
அன்னைத் தமிழுக்கு இழுக்கு எனில்
அடங்கியா இருப்பாய்
மண்ணை ஆள்பவன் என்றாலும்
இடியாய் முழங்கு- மண்ணை
ஆண்டவன் என்றாலும்
எரிதழலாய்க் கிளம்பு.
இயற்கை எப்படி சீரழிகிறது
வானத்தை எப்படி கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கு இதோ ஒரு கவிதை ஒரு விதைபோல விழுந்திருக்கிறது
உழுத்துப்போன
விறகை எரித்த சாம்பைலையொத்த
வானவீதியில்
நெற்றியை மட்டும்
நீட்டி நீட்டி
போக்குக் காட்டி
பாதை அமைக்கிறது நிலா.
இந்தக் கவிதை ரசிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.
இது ஒரு முரண் கவிதை.
என் உசுரே வழி நடத்துவதே என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை கவிதையாக ஒரு நாட்டுப்புற பாடலாக நம் கண் முன் மிளிர்கிறது.
அதில் சில வரிகள்
பழைய வயலில் சம்பா நெல்லு
அறுக்கப் போனோமே.
குத்திய சம்பா நெல்லை பிரிச்சு
அரிச்சுத் தின்னோமே
வாய்க்கால் வரப்பெல்லம்
நம் கதையைச் சொல்லுமடி
வாய் தெறந்து சொல்லு
நான் துணையாய்
அவரெனெடி.
இதோ மதத்திற்கு ஓர் கவிதை
மதம் -நான் வாழ வழியல்லவா
சொல்ல வேண்டும்
எனக்குள் வலியை அல்லவா
வழங்கியிருக்கிறது.
இதற்குள் எத்தனை பொருள் அடங்கிக் கிடக்கிறது. மதத்தால் சாதி சாதியால் சண்டை மூடநம்பிக்கை.
சாதியால் ஊர்கள் அழிகின்றன
மதத்தால் நாடுகள் அழிகின்ற
இதுதானே உண்மை.
இன்னொன்று இன்றைய நடப்பதை வைத்து ஒரு கவிதை அதுதான் மேற்கு வங்கத்திலும் நடக்கிறது. தமிழ்நாட்டிற்கும் வந்து விடுமோ என அஞ்சுகிறேன்.
கற்பு என்பது பொதுவென்று
கற்பிக்க மறந்து போனதாலே
தீயுக்குள் தள்ளப்பட்டால் சீதையுமே
ஆண்கள்
திருப்பி அடித்துத் தீயில் தள்ளியிருந்தால்
அன்றே அவனும செத்திருப்பான்.
ஆண்டுகள் கடந்தும்
எப்படி முளைத்திருப்பான்.
எது அறம் என மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அதற்கு ஒரு சாட்டையடி.
மாட்டுக்கறி ஏற்றுமதியில்
முதலிடம் வகிக்கிறோம்
நாம் தின்னக்கூடாது என
கத்தியைத் தீட்டுகிறார்.
இது முரணும் சமூக நீதிக்குமான கவிதை.
ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்திற்கெதிராய் ஒரு பெரு முழக்கக் கவிதை.
ஒரே நாடுன்னு ஏத்துக்கிட்டு
பல வருசம் ஆச்சு பிள்ளை
ஒரே மொழின்னு திணிக்குறாங்க
நம்ம ரத்தம் கொதிக்குது உள்ளே
கடைசியில் ஒரு உசுரும்
இல்லாமல் ஆக்கப் போறாங்க
ஒரேயடியாக நம்மைத்தானே
அழிக்கப் பாக்குறாங்க
அதற்கடுத்து கவிஞரின் வரிகளைப் பாருங்கள்
இங்கு எரிமலைகள்
இல்லையெனச்
சொல்லுறாங்களே
நீயும் நானும்
கொதித்தெழுந்தால்
அடங்குவாங்களே.
ஒரு இனம் அழிய வேண்டுமானால் அவன் மொழியை அழிக்க வேண்டும்.
அவனுக்கென இருந்த மொழியை அழித்துவிட்டால்
அவனுக்கு உசிரேது
அகவே எரிமலையாய்
நோஹிலு.
மாட்டுக்கறி ஏற்றுமதியில்
வயது.
மாட்டுக்கறி தின்றால்
கத்திபாயும்.
சர்வதேச
மாட்டு மோத்திரம் குடி
தின்னாதே மாட்டுக்கறியை.
இதுவும் அந்தக் கும்பல்தான்
இப்படி முரண்பட்ட ஒன்றைச் சொல்கிறது.
இந்த புத்தகத்திற்கு தலைப்பிட்டுள்ள அப்பாையால அடியும் நவம்பர் 25 கவிதையும் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்கு எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வருகிறார்.
இதுபோல எத்தனையோ கவிதைகள்
இவை அணைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோரின் கவிதைகளின் பின்னோட்டமாகவும்
அண்ணல் அம்பேத்கார் தந்தை பெரியார் ஆகியோர் கொள்கைகளின் கூட்டுக் கனியாகவும் அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.
இத்தனை சொல்கிறீர்களே இந்த நூலாசிரியர் யார் எனச் சொல்லவில்லையே..!
இப்படி எழுத யாருக்கு துணிச்சல் வரும்.
என் அன்பு இளவல் புதுக்கோட்டை கவிமதி சோலச்சி.
விருது பெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்தான் வழங்கப்பட்டது.
வாங்கிய பொழுதே வாசித்து முடித்தேன்.
அவருடைய கவிதை சிறுகதைகள் நாவல் அனைத்தையும் படித்திருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன். இலக்கிய தாகம் மட்டுமல்ல சமூக தாகமும் கொண்ட இளவல் சோலச்சி
தலைசிறந்த இலக்கிய ஆளுமையாக வருவார் என வாழ்த்துகள்.
- எழுத்தாளர்.சி. அன்னக்கொடி
![]() |
| எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்களுடன் சோலச்சி |

