புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் திரு.ப.அமிர்தராஜ் அவர்களின் பார்வையில் சோலச்சியின் கரும்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்
கருப்புச் சட்டையும்
கத்திக் கம்புகளும்
எடுத்துரைக்கிறது
உண்மையான சாமி
நம்ம மனசு தாயானு.....
காலம் இவ்வளவு சீக்கிரம் சுருங்கும்
என்று யாருக்குத்தான்
தெரியும்.... கடந்த கால
நினைவுகளை தேவைக்கு அதிகமாக வழங்குங்கள் இந்த கருப்புச் சட்டை.....
உன்னால் முடியாது என்றால்
உலகத்தாலே முடியாது..
நம்மால் முடியாது என்றால்
எவராலும் முடியாது... 💪
கருணாவும் முத்துசாமியும் இணைந்த கைகள்🫂
ஊமச்சி தடவும் பாக்கியராசு
நம் கண்ணீரையும்
தடவி விட்டுச் செல்கிறான்......
எல்லோரும் விழித்தார்கள்
பழனியம்மாள் மட்டும்
விழிக்கவே இல்லை...
விழிகளில் நிரம்பி வழிகிறது கண்ணீர்...
நானும் கருப்புச் சட்டைக்காரன் தானு
சொல்லும் போது
நானும் நசீர்பாயுடன்
பயணிக்கிறேன்....
இப்படி எல்லா கதாபாத்திரமும்
நம்முடன் பயணிக்கிறது....
வட்டார வழக்கு
வழக்கம் போல்
இனிக்கிறது
கருப்புச் சட்டையும்
கத்திக் கம்புகளும்
நமக்கு கற்பிப்பது
முழுமையான கல்விதான் முக்கியம்📖💪
இந்த வாய்ப்பை அளித்த அருமை மாமா *கவிமதி. சோலச்சி* அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்✒️👍
மாப்பிள்ளை ப. அமிர்தராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
வெளியிடு:
இனிய நந்தவனம் பதிப்பகம்
திருச்சிராப்பள்ளி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக