செவ்வாய், 28 அக்டோபர், 2025

"சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் குறித்து - கவிஞர் சின்ன கனகு

 

"சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் குறித்து கவிஞர் சின்ன கனகு "


வாசகர் 🌹கருத்து

🍀🍀🍀🍀🍀🍀🍀


வட்டார மொழி

செதுக்கள் சேதாரம்

சிராய்ப்பு  இல்லாத

ஆப்பை( அகப்பை)

தலைப்பே சிறப்பு..!


மறைந்தும் மறையாத

தாயிடம்

துன்பம் விலக

தூங்கி எழ

ஆப்பையால ஒரு அடி

அரு மருந்தாக

வருந்தி கேட்பு..!


வாழப் படி

ஆழ(ள)ப் படி

நல்ல நூலைப் படி

மூனு படி அருமை..!


வான் வெளி

வசிப்பிட தேடலிலும்

வாகை சூடிய

பெண் இனமே

சாமி சன்னதியில்

அனுமதி இல்லையே..!


கீழக்கரை

மேலெழுவதை

சகிக்காமல்

வானுக்கும் பூமிக்கும்

பற்றும்

ஆதிக்க சா- தீ

அணைக்க அழைப்பு..!


இருப்பதை காக்க

இழந்ததை மீட்க

எழுத்து வா

தொழிற் சங்க

அறைகூவல்..!


பெருமாள்பட்டிகளின்

பேருண்மை..!


வெட்டாமல் விட்டு விட்டால்

பறவைகள் எச்சம் கூட

மரங்கள் நிறைந்த காடு..!


பதவிப்பசி

பரிமாறப்படுகிறது

மனிதக்கறி விருந்து

பனி மலை

ஆப்பிள் தோப்பில்..!


இப்படி

கவிஞர் சோலச்சியின்

ஆப்பையால் ஒரு அடி

இன்னும் ஏராளமான

தழும்புகளுடன்

கவிதையாக....

                 

கவிஞர் சின்ன கனகு 





                   
அன்புடன்

         வாசிப்பின்  வாசகர்

சின்ன கனகு புதுக்கோட்டை

               +91 98431 21055







கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742




கருத்துகள் இல்லை: