பாடல்....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்....... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 அக்டோபர், 2017

அம்மாடி உன் நெனப்பு - சோலச்சி



அம்மாடி உன் நெனப்பு
அடங்கலடி இன்னும் தவிப்பு
சும்மாடி நான் மொறச்சேன்
சுத்தி வருது உன் சிரிப்பு  - இப்ப
தாவணிய தான் மறந்து
சேலையத்தான் சொருவிக்கிட்ட
ஆத்தாடி கெரங்கி போறேன்
அழகு கொலுசோரம் இறங்கி வாரேன்......!

கண்ணாடி உன் உடம்பு
கண்டபடி மினுக்குதடி
என்னடி நீயும் செஞ்ச
எம்மனசு தவிக்குடி  - இப்ப
ஊரோரம் ஆத்தங்கரை
வறண்டு போயி கெடக்குதடி
வேகமாக ஓடிவாடி நீயும் - நீ
வந்தா தானே அதுல தண்ணி பாயும்.......!

விஞ்ஞான உலகமிங்கே
விறுவிறுனு போகுதடி
வீதியில வந்து பாரு
விதவிதமா தெரியுதடி - இன்னும்
அந்தக்கால நெனப்புலதான்
இங்கே நீயும் சுத்திவார
உன் முத்து விழிகள் எனக்காக திறக்கட்டும்
சித்தன்னவாசல் ஓவியம்போல நம்காதல் சிறக்கட்டும்......!
       _ சோலச்சி புதுக்கோட்டை
        பேச :9788210863

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

மாட்டுக்கறியோ...... - சோலச்சி



மாட்டுக்கறியோ மரக்கறியோ
அவனவன் விருப்பம்
அடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா
புரட்சிதான்டா வெடிக்கும்...


மனித இரத்தமா மாட்டு மூத்திரமா
எதுடா இங்கே புனிதம்
மனிதனை வெட்டி சாய்க்கிறான்
மதத்தை தூக்கி வைக்கிறான்
செத்துப்போனதே மனிதம்....


சர்வாதிகார நாடாப் போச்சு
சாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு
சத்தியமா சொல்லுறேன்
புருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட
வரியும் விதிப்பான்
புள்ள வயசுக்கு வந்தாலும்
வரிதான் கேட்பான்..........


தமிழ் கன்னடம் உருது இந்தி
எப்படி மாறும் ஒரே இனமா
இந்துக்குள்ளே அடிமையாக்குறான்
இஸ்லாமை வேரறுக்குறான்
காவியால் ஆகுது ரணகளமா....


ஆணவப் போக்கு ஓங்கிருச்சு
அத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு
உள்ளபடி சொல்லுறேன்
நாம மனுசனாக ஒன்னா இருந்தா
மசுர புடுங்க முடியுமா
திருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா
அவன்தான் தொடர முடியுமா...

   - சோலச்சி புதுக்கோட்டை