திங்கள், 13 பிப்ரவரி, 2017

கண்ட கண்ட பொண்ணுகயெல்லாம்...

காதலைக் கொண்டாடுவோம்......

கண்ட கண்ட பொண்ணுகயெல்லாம்
என்னப் பார்த்து கண்ணடிக்க
அதனால கறுத்துப்போனேன்
ஆசை சுந்தரி
நீ மயக்கம் தெளிஞ்சு மலர வேணும்
இப்ப எந்திரி.....!

செம்மண் புழுதியில சீவி சிரிச்சு மினுமினுக்க
சிவப்பு சேலை கட்டிப்போன
செங்காந்தள் மலரே உன்ன
இறுக அணைக்கவா
அணச்சு முத்தம் கொடுக்கவா....!

களைக்கொத்து புடுச்சு புடுச்சு - உன்
ரேகை எல்லாம் அழிஞ்சுருச்சு
நீ வெதச்ச கடலை மட்டும்
விவரமாக வெளஞ்சிருக்கு
நானும் கூட கறுப்புதானடி - நீ
எனக்கு ஏத்த எடுப்புதானடி....!

தலையில உருமாகட்டு
அதுக்கு மேல புல்லுக்கட்டு
என்னை நீ மல்லுக்கட்டு
ஏத்த இடம் ஜல்லிக்கட்டு
நீயும் கணக்கு பண்ணி பாரு
இப்ப கண்ண விழிச்சு கூடு....!

நம்ம ஊரு சாமியத்தான்
நல்லா நீயும் உத்துப்பாரு
விளக்கு வச்சு பார்த்தால் கூட
சிவக்கலையே கறுத்த பெண்ணே
அதுக்கு இந்த கறுப்பு
பரவாயில்லை ஏத்துக்க
உன் மாராப்பாய் என்னைத்தானே போத்திக்க...!

அஞ்சடி கூந்தல்காரி
அரப்பு போட்டு நானும்  குளிச்சேன்
அப்பவும் உன்ன பார்த்து மிரண்டு
இப்ப போனதடி சுருண்டு
என் ஆசையெல்லாம் திரண்டு
வர பண்ணுறீயே முரண்டு....!


இன்னும் மயக்கம் தெளியலையா
இந்தக் கறுப்பு பிடிக்கலையா
என்ன விட நீயும்
அட கொஞ்சம் தான்டி சிவப்பு
அதுக்கு ஏண்டி இப்படி நீயும்
செய்யுறீயே முறைப்பு....!
     - சோலச்சி புதுக்கோட்டை

2 கருத்துகள்: