திங்கள், 28 மார்ச், 2022

ஆத்தூரில் சிறுகதை பயிலரங்கம் - சோலச்சி

 

23.03.2022 முதல் 25.03.2022 மூன்று நாள் சிறுகதை பயிற்சி பட்டறை சேலம் ஆத்தூர் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாள் 24.03.2022 வியாழக்கிழமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன்.



 எனக்களித்த இரண்டரை மணி நேரத்தை பயனுள்ளதாக்கினேன் என்றே நம்புகின்றேன்.  மாணவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அதை உறுதி செய்தது. இந்நிகழ்வில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் மாணவர்கள் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். 



மு.வ அவர்களின் 'குறட்டை ஒலி' சிறுகதை ஒன்றும் வளர்இளம் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்களின் 'செவலக்காளை' சிறுகதை ஒன்றும் எனது 'குறி' என்கிற சிறுகதை ஒன்றும் மாணவர்களின் பார்வைக்காக வழங்கினேன். இடையிடையே சின்னச்சின்ன நகைச்சுவை கதைகளும்.....

    

          பேராசிரியர் மு.முருகேசன் அவர்கள் நினைவு பரிசு வழங்குகிறார்கள் 

 கலந்துரையாடலாக நடைபெற்ற இந்நிகழ்வில் பதினேழு சிறுகதை எழுத்தாளர்களை அடையாளம் காண முடிந்தது.  சிலர் தயங்குவதையும் உணர்ந்து கொண்டேன். அதற்கு தாழ்வு மனப்பான்மை ஒன்றுதான் காரணம் என்பதையும் புரிந்து கொண்டேன். மாணவர்களுக்கு எனது வழிகாட்டல் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.  நான் பயிலரங்கம் முடிந்து கிளம்பும்போது மாணவர்கள் (மகளிர்) பலர் ஓடி வந்து அவர்கள் எழுதிய சிறுகதைகளை காண்பித்தனர்.  தயக்கம் உடைத்து பெரும்படை உருவாகிவிட்டது என்று நம்புகின்றேன். 

சாதனைக்கவிஞர் மதுரம் ராஜ்குமார் அவர்கள் 


இதுபோன்ற பயிலரங்கங்களை ஒவ்வொரு கல்லூரியின் தமிழ்த்துறையும் நடத்தினால் சிறப்பாக இருக்கும். 





மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையச் செய்த தமிழ்த்துறை  பேராசிரியர் மு.முருகேசன் அவர்களுக்கும் தமிழ்நாடு கலை இலக்கிப் பெருமன்ற மகாகவி நாணற்காடன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.