வெள்ளி, 24 மார்ச், 2017

வாரந்தோறும் வியாழன் வெள்ளி

நீண்ட நாளாய் பதிய வேண்டும் என நினைத்த பதிவு .......

   எம் பள்ளியில் (ஊ.ஒ.ஆ.பள்ளி, மரிங்கிப்பட்டி. அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை ) ஒவ்வொரு வியாழனும் மதியம் விளையாட்டு விழா,  ஒவ்வொரு வெள்ளியும் மதியம் இலக்கிய விழா. மதியத்திற்கு  மேல் பாடப் புத்தகப் பயன்பாடு கிடையாது. இலக்கிய விழாவில் மாணவர்களே தலைமை ஏற்று தொகுத்தும் வழங்குவார்கள்.

  
இன்றைய நிகழ்வில் மாணவர்கள் தாங்களாகவே கவிதை வடிவில் பேசியும் அவர்களே தயார் செய்து பாடலும் பாடினார்கள். கதை சொல்வது, நகைச்சுவை, தனி நடிப்பு என பலதரப்பட்ட நிகழ்வுகள் இருக்கும். மாணவர்களுக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்து காட்டுவார்கள்..

மாணவர்கள் பாடிக்கொண்டு நடனமாடும் காட்சி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக