செவ்வாய், 28 நவம்பர், 2017

விரிசல் நூல் வெளியீடு - சோலச்சி

    எனது இரண்டாவது கவிதை நூலான மேன்மை வெளியீட்டில் உருவான "விரிசல் " கவிதை நூல்  25.11.2017 அன்று மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நகர்மன்றத்தில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணக்குமார் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி அவர்களால் வெளியிடப்பட்டது.  இந்நிகழ்வில் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி,  புதிய தலைமுறைக் கல்வி இதழின் தலைமை உதவி ஆசிரியர் மோ.கணேசன், மேன்மை வெளியீட்டின் உரிமையாளர் தோழர் மணி,  அறிவியல் இயக்க நண்பர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள்,  ஆர்வலர்கள்,  பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
  

2 கருத்துகள்: