ஞாயிறு, 21 ஜூலை, 2019

கருங்காலிகளை கண்டு தெளிவோம் - சோலச்சி




பொதுச் சொத்தை திங்கவில்லை
பொறுப்பான மனிதன்
என்னைப் போல் வேறு எவருமில்லை
நாணயமான மனிதரென்று
நயமாகப் பேசிடுவார் - என்
வேட்டியில் கறை பட வைக்கலாமா என்றே
வேகமாய் மடித்துக் கட்டி வம்பிழுப்பார்....

வயதில் மூத்தவன் என்பார்
வாய்க்கு வாய் தன்னை நல்லவனென்பார்
என்னிடமும் ஒரு வார்த்தை கேளென்பார்
பெரியோன் எனச் சொல்லி
சிறுமை தனம் கொள்வார்....

அயோத்திதாசர் ரெட்டைமலையார் அம்பேத்கார் செய்த பணிதனை
எண்ணிப் பார்த்தால் இவ்வாறு செய்வாரா
இழிகுணம் கொள்வாரா.....




மாமன் என்பார் மச்சான் என்பார்
அண்ணன் என்பார் தம்பி என்பார்
கூடவே இருந்து குழியும் பறிப்பார்...

வல்லுப் பொறுக்கிகளுக்கு எலும்புறுக்கி நோய் வந்து செத்தாலும் கவலையில்லை...

ஊரார் சொத்தை உண்டு பெருத்தோர்
உருப்படியாய் வாழ்ந்ததில்லை
ஊரும் உலகம் ஒருநாளும் வாழ்த்துவதில்லை....

கருங்காலிகளை கண்டு தெளிவோம்
கடமையாற்ற கணம் துணிவோம்....

கயவர்களின் வேரறுப்போம் - களத்தில்
கண்ணியமாய் கரம் கோர்ப்போம்...!!
                                 
                                                 - சோலச்சி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக