திங்கள், 25 ஜூலை, 2016

திரு. காந்தி - அண்ணல் அம்பேத்கர்

பகிர்வு செய்தி....

இந்த காட்சி படிமங்கள் உணர்த்தும் அரசியல் நுணுக்கமானது .....உண்மையை புரிஞ்ச]

;ஒருவன் கபாலியை கொண்டாடுவான்....உண்மையை எதிர்கொள்ள முடியாதவன்{கபாலியோட மொழியில் சொன்னா ஆண்டைகள்}தலித்  அல்லாதோர் கூட்டியக்கம் கட்டி குடிசைகளை தேடி அலைவான் கொளுத்தி போட.......சரி கபாலிக்கு வருவோம்....இப்படத்தில் ஒருவசனம் வருகிறது.....காந்தி சட்டைகூட போடாமல் தன்னை ஒரு எளிய வாழ்க்கை வாழும் மகாத்மாவாக காட்டிக்கொண்டதற்கும், அம்பேத்கர் கோட்-சூட் அணிந்துகொண்டதர்க்கும் பின்னாடி ஒருஅரசியல் இருக்கு என்று கபாலி பேசுவார்....இந்த நூறாண்டுகால இந்திய சினிமாவிலும், எழுவது ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றிலும் இப்படி ஒரு உரையாடைலை நான் கேட்டதில்லை....அதுவும் கதையின் நாயகன் பேசுவதாக...காந்தி, அம்பேத்கர் என்கிற இரண்டு  ஆளுமைகள் வெளிப்படுத்திய நுட்பமான அரசியலை பொது ஊடக வெளியின் விவாதத்திற்கு உட்படுத்திய இயக்குனரின் நேர்மை கவனிக்கப்படவேண்டியது...காந்தியின் துறவு{ அதாவது சட்டையை கூட ஆடம்பரம் என்று கருதி நிராகரிக்கும் மகாத்மாவின்மனநிலை} பற்றி பேசுவோம்...காந்தி தான் எப்போதும் ஏழையினும் ஏழையாக வாழ விரும்புவதாக கூறியே வந்திருக்கிறார்....என்னுடைய கேள்வி இதுதான்...ஏழ்மை என்பது வெறும் உணவோடும் , பணத்தோடும், வாழிடத்தோடும் மட்டுமே சம்மாந்தப்பட்டதா? சாப்பிட வழியில்லாமல் இருப்பதும் , உடுத்த உடைஇல்லாமல் இருப்பதும் மட்டுமே ஏழ்மையா? ஏழ்மைஎன்பது இவைகள் இருப்பது, இல்லாமல் இருப்பதை பற்றிஅல்ல...அது.அதிகாரத்தோடு சம்மந்தப்பட்டது....௨௦௦௦ ஆண்டுகளாக கூலிகளாக, கொத்தடிமைகளாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டவர்களாக, எதிர்த்து கேள்வி எழுப்ப அனுமதிக்கபடாதவர்களாக, கல்வி மறுக்கப்பட்டவர்களாக, தங்களின் உடலுழைப்பை சுரண்டி,  கையளவு நெல்மணிக்காக வீட்டின் புழக்கடை பக்கம் நிறுத்திய ஆண்டைகளின் கருணைக்காக? தன்மானம் இழந்தவர்களாக, தெருக்களில் எச்சில் துப்பினால் தண்டிக்கப்படுபவர்களாக, மாராப்புசேலை உடுத்தினால் மார்பு அருக்கப்படுபவர்களாக, இப்படி மகாத்மா எப்போதும் கைகளில் வைத்திருக்கும் பகவத்கீதை போதித்த மனுதர்ம வாழ்வியல் நெறிகளுக்கு? உட்பட்டே வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டவர்களாக , இருத்தலுக்காக மாபெரும் துயரங்களை வரலாறு நெடுகிலும் சுமந்து வந்த,,,, ஒரு சமூகம் அதிகாரத்தை விட்டு நெடுந்தூரம் தள்ளி வைக்கப்பட்ட சமூகம்.....ஏழ்மை என்பது வெறும் பணத்தோடு சம்மந்தப்பட்டதுஅல்ல...அது அதிகாரமற்று இருப்பது....அனால் காந்தி ஒருஅரசியல்வாதியாக அதிகாரத்தை கைக்கொள்ளவே விழைந்தார்....அதை சிறப்பாகவே செய்தார்....1930.களில் இந்தியாவின் மிகஅதிகாரம் படைத்தவராகவே காந்தி இருந்தார்...நீங்கள் அதிகாரம் படைத்தவராக இருந்தால் எளிமையாக வாழலாம்...ஆனால் ஒருபோதும் ஏழையாகமுடியாது...இந்த சமூகத்தில் பஞ்ச பராரிகள் அரைநிர்வாணமாக அலைவது யாருடைய கருணைக்கும் உகந்ததுஅல்ல...ஆனால் அதிகாரத்தோடு தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர்கள் கதர்சட்டை போட்டுக்கொண்டிருப்பதுதுதான்....இங்கு எப்போதும் பொதுபுத்தியை கவரும்.....அம்பேத்கர் ஏழையாகவே பிறந்தார் அவரிடம் துறப்பதற்குஉடமைகள் எதுவும் இல்லை....காந்தியிடம் துறப்பதற்கு நிறைய உடமைகள்இருந்தன....அதனாலே காந்தியின் துறவும் , எளிமையும் அவரை , அவரின் மகாத்மா பிம்பத்திற்கு வலிமை சேர்த்தன.....காந்தி தன்னை எளியவனாக , ஏழ்மையாக வைத்திருக்க தென்ஆப்பிரிக்காவில் பலஏக்கர் விலைநிலங்களும் , இயற்கைவழியிலான பழ மரங்களும் தேவைப்பட்டன.....இந்த எளிய வாழ்க்கைக்கு நிதி அளிப்பவர்களாக அவரின் நெருங்கிய நண்பர்கள் பிர்லாவும், பணக்காரகட்டிடக்கலை நிபுணர் ஹர்மன் அவர்களும் அவருக்கு உதவியாக இருந்தார்கள்...காந்தி தொடங்கிய பத்திரிகையின் முக்கிய புரவலர் பிர்லா..ஹர்மன் அவர்கள் ஜோகன்ச்பெர்கில் 110 ஏக்கர் நிலத்தை தந்து காந்தியின் எளிமைக்கு துணை நின்றார்....ஆனால் அம்பேத்கர் கோட்-சூட் அணிவதை எதிர்ப்பு அரசியலின்குறியீடாகத்தான் வெளிப்படுத்தினார்...அம்பேத்கர் எளிமையாக வாழ முயற்சி மேற்கொண்டதில்லை,,சுயமரியாதையோடு வாழவே போராடினார்...ஏனெனில் அம்பேத்கர் ஒருபோதும் தன்னை சுற்றி மகாத்மா பிம்பத்தை கட்டிஎழுப்ப விரும்பியவர் இல்லை..ஒருகையில் பகவத்கீதையை வைத்துக்கொண்டே  சமத்துவம் பேசும் மகாத்மாவை எதிர்த்து தனது வாழ்நாளெல்லாம் கத்திமுனை கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தவர் அவர்.சுயமரியாதை என்பது நான் என்னஉடுத்த வேண்டும், என்னசாப்பிடவேண்டும் என்று நீ தீர்மானிக்ககூடாது....அது எனது விருப்ப உரிமையோடு தொடர்புடையது என்று சொல்லித்தான் தன்னை வெளிப்படுத்தினார்.....உரிமையும் தன்மானமும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையவை......தனமானம் வேண்டுபவன் சாதி இழிவை ஏற்க்க மாட்டான்.....சாதிஇழிவை எதிர்ப்பவன் இந்து மதத்தை ஏற்க்க மாட்டான்.....ஆனால் காந்தி ஒரு நல்லஇந்துவாகவே இருக்க  ஆசைப்பட்டார்.....அம்பேத்கர் இந்துவாக சாக விரும்பவில்லை......காந்தியின் எளிமை அவரால் அவர்மீது வலிந்து திணித்து கொள்ளப்பட்டது....அம்பேத்கரின் கோட்-சூட் மானுட சமத்துவத்திற்கான அடையாளம்....அவரின்உடல்மொழி அடக்குமுறைக்கான எதிர் வினை.....ஆண்டைகளுக்கான எதிர்ப்பு அரசியல்.....இதுதான் கபாலி மின்வைக்கும் அரசியலாக பார்க்கிறேன்....மகிழ்ச்சி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக