திங்கள், 26 டிசம்பர், 2016

ஆதாரின் அவல நிலை ...

ஆதாரின் அவல நிலை .....

   என் தேசம் எதை நோக்கி போகிறது ....
திட்டமிடலின் ஒழுங்குமுறை தெரியாதவர்களின் பிடியில் சிக்கி என் தேசம் சீரழிவின் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.

   ஆம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு டிஜிட்டல் பண வர்த்தகம் என்ற பெயரில் கோமாளி தனங்கள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 

      அதே போல்தான் ஆதார் என்கிற பெயரில் அரசு, மக்களை அலைக்கழித்து வேடிக்கை பார்க்கிறது . ஒவ்வொரு ஊராட்சிக்கும் அலுவலர்களை முகாமிடச்செய்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமாவது ஆதாரை எடுக்க வகை செய்யாமல் அனைத்து தரப்பினரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் என்கிற பெயரில் காத்திருந்து அவதிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்.

   அதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். ஆமை வேகம் என்று கூட சொல்ல முடியாது.. அவ்வளவு மந்தமான நிலை.

    குழந்தைகளும் பெரியவர்களும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் நிலையை சொல்லி மாளாது.

   ஆதார் விண்ணப்பங்களை அரசே இலவசமாக வழங்கி அரசு அலுவலர்கள்  பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாய் இருக்கிறது.  அதிக விலை கொடுத்து விண்ணப்பங்களை வெளியே வாங்கும் அவல நிலை ...

  இடம் : வட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.

1 கருத்து: