வியாழன், 7 செப்டம்பர், 2017

மாட்டுக்கறியோ...... - சோலச்சி



மாட்டுக்கறியோ மரக்கறியோ
அவனவன் விருப்பம்
அடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா
புரட்சிதான்டா வெடிக்கும்...


மனித இரத்தமா மாட்டு மூத்திரமா
எதுடா இங்கே புனிதம்
மனிதனை வெட்டி சாய்க்கிறான்
மதத்தை தூக்கி வைக்கிறான்
செத்துப்போனதே மனிதம்....


சர்வாதிகார நாடாப் போச்சு
சாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு
சத்தியமா சொல்லுறேன்
புருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட
வரியும் விதிப்பான்
புள்ள வயசுக்கு வந்தாலும்
வரிதான் கேட்பான்..........


தமிழ் கன்னடம் உருது இந்தி
எப்படி மாறும் ஒரே இனமா
இந்துக்குள்ளே அடிமையாக்குறான்
இஸ்லாமை வேரறுக்குறான்
காவியால் ஆகுது ரணகளமா....


ஆணவப் போக்கு ஓங்கிருச்சு
அத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு
உள்ளபடி சொல்லுறேன்
நாம மனுசனாக ஒன்னா இருந்தா
மசுர புடுங்க முடியுமா
திருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா
அவன்தான் தொடர முடியுமா...

   - சோலச்சி புதுக்கோட்டை

2 கருத்துகள்: