சனி, 28 ஏப்ரல், 2018

வீதி கலை இலக்கிய களமும் - ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியும் - கவிமதி சோலச்சி

"உரக்கச் சொல்வோம் உண்மையை"

இலக்கிய நிகழ்வு ஒன்று தொடர்ந்து மாதந்தோறும் மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் இடத்தில் இலவசமாக இயங்கிவருகிறது என்றால் அது புதுக்கோட்டையின் "வீதி கலை இலக்கிய கள""மாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

   மாதந்தோறும் பல்வேறு எழுத்தாளர்களை வரவேற்று உலகறிந்த படைப்பாளர்களையும் உருவாகும் படைப்பாளர்களையும் உலகுக்கு அறிமுகம் செய்து வருகிறது. மின்சார வாடகை இல்லை,  அறை வாடகை இல்லை,  கழிப்பறை வசதியுடன் கூடிய விசாலமான அறையை மாதந்தோறும் இலக்கிய நிகழ்வுக்காக இலவசமாக தந்துகொண்டிருப்பவர்தான் ப்ரியத்திற்குரிய அண்ணன் புதுக்கோட்டை  ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜின் நிறுவுநர் உரிமையாளர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்.

   பலநேரங்களில் இலக்கிய நிகழ்வு நடைபெறுகிறபொழுது தனது கல்லூரி மூலம் தேநீரும் இனிப்புகளும் வழங்கி படைப்பாளர்களை கௌரவப்படுத்தி வருபவர். அது மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய கவிஞர் வைகறை அகால மரணமடைந்தபோது தானாக முன்வந்து அந்தக் குடும்பத்திற்கு பெரும் தொகையை தந்து உதவியவர். இன்று வீதி கலை இலக்கிய களமானது 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை தனது ஐம்பதாவது நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றதென்றால் தனது கல்லூரியை மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இலக்கிய நிகழ்வுக்காக வழங்கிவரும் அருமை அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களையே சேரும்.

  எந்தவித விளம்பரமும் ஆடம்பரமும் இல்லாமல் புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் மாடியில் மிகச் சிறந்த கேட்டரிங் காலேஜ் -ஐ நடத்தி வரும் சமையற்கலை வல்லுநர் சமூக சிந்தனையாளர் இலக்கிய ஆர்வலர் அருமை அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களுக்கு புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றது...

   தோழர்களே...!
உண்மையைச் சொல்வதும் உளமார வாழ்த்துவதும் உலக நடைமுறை.

    அண்ணன் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களின் பணி சிறக்க மனசார வாழ்த்தி மகிழ்கிறேன் ...
  நீங்களும் வாழ்த்தி மகிழ்வீர்கள் என்று நம்புகின்றேன்

  நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்
கவிமதி சோலச்சி புதுக்கோட்டை

2 கருத்துகள்:

  1. அருமை உண்மை வாழ்த்துகள் பா

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    ஆக்ஸ்போர்டு திரு சுரேஷ் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துவோம்
    அவர்தம் தொண்டு தொடர போற்றுவோம்

    பதிலளிநீக்கு