நெஞ்சம் நிறைந்த நன்றி
கவிஞர் , எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட புதுக்கோட்டை.சோலச்சி அவர்கள் எழுதிய "கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்" சிறுகதை தொகுப்பிலிருந்து குருவிக்காடு என்கிற சிறுகதையை படித்தேன்...
படித்து முடித்த போது ஒரு எதார்த்த வலிகளை நம் நெஞ்சுக்குள் இறக்கிய ஒரு திரைப்படம் பார்த்த நிலை எனக்குள் ஏற்பட்டது.
அன்றாடம் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் அறிந்த போராட்ட செய்தி என்றாலும் கூட....
மண்ணின் வளத்தை, விவசாயத்தை பாதுகாக்கப் போராடும் டெல்டா பகுதி மக்களின் வலி கலந்த போராட்ட குணம், சாவுக்கு அஞ்சாத வீரம், மண்ணுக்காக விவசாயிகள், பொதுமக்கள் ஒற்றுமையாக ஒன்றுகூடி முடிவெடுத்தல், இயற்கை வர்ணப்பில் அப்பகுதி கிராமத்தின் பசுமை அழகு உள்ளிட்ட காட்சியமைப்பு விதம் என்றே சொல்லத் தோணுது...
இக்கதையை நாவலாக எழுதியிருந்தால் இன்னும் தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகள், அப்பகுதி உழைக்கும் மக்களின் வாழ்வியல் இன்ப, துன்பங்களை கூடுதலாக அறிந்து கொள்கிற வாய்ப்பு எங்களுக்கு (வாசிப்பவர்களுக்கு) கிடைத்திருக்கும். இக்கதையின் முடிவில் நானும் ரயில் ஏற கிளம்பி விட்டேன்.... ஆனால், என் மனமும் மயான அமைதியாகிவிட்டது.
மிக.. மிக... சிறப்பான சிறிய படம் (சிறுகதை). மென்மேலும் உங்களுடைய இலக்கிய பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!
T.பிரபுபாரதி - விருத்தாசலம்.
83440 50743
86100 30889
நூலாசிரியர் சோலச்சி
9788210863
Spade Spade Tattoo Ideas - Tits Tattoo Ideas
பதிலளிநீக்குSpade titanium cup Spade Tattoo Tattoo Ideas · Spade Tattoo samsung titanium watch Ideas titanium lug nuts · Spade camillus titanium knife Tattoo Tattoo Tattoo Tattoo Tattoo titanium trimmer as seen on tv Tattoo Tattoo Tattoo Tattoo Tattoo Tattoo