திங்கள், 6 செப்டம்பர், 2021

நட்சத்திர ஆசிரியர் விருது - சோலச்சி

'நட்சத்திர ஆசிரியர் விருது''


கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.கவி முருகபாரதி அவர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் அலைபேசியில் அழைத்தார்கள். பேச்சின் தொடக்கத்திலேயே தங்களுக்கு இந்த ஆண்டுக்கான கவிராசன் அறக்கட்டளை மூலமாக வழங்கும் நட்சத்திர ஆசிரியர் விருது வழங்க இருப்பதாக தகவல் சொன்னார்கள்.   கவிராசன் அறக்கட்டளை பற்றி நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.



 கவிராசன் அறக்கட்டளை மூலமாக விருது பெறுவதற்கு நாம் விண்ணப்பிக்க முடியாது. கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களுமே விருதுக்குரியவர்களை பரிந்துரை செய்வார்வார்கள். யார் யாருக்கு பரிந்துரை வந்துள்ளது,  யார்  பரிந்துரை செய்தது என்பதெல்லாம் ரகசியம். பரிந்துரை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படாது. பரிந்துரைக்கு வந்தவர்களில் ஐந்து ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரை செய்த தோழர்களுக்கும் கவிராசன் அறக்கட்டளைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


     நட்சத்திர ஆசிரியர் விருது மூலமாக மேலும் செழுமைபடுத்திக்கொள்கிறேன்.  நம்முடைய செயல்களை நமக்கே தெரியாமல் பலரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே உண்மை. விருதுக்காகவும் பாராட்டுக்காகவும் நாம் உழைக்கவில்லை. நம்முடைய உழைப்பு மூலம் மேலும் நன்மைகள் உண்டாகுமெனில் அதுவே வெற்றி.

   




நட்சத்திர ஆசிரியர் விருது வழங்கும் விழாவானது 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டையின் புகழ்மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.



நாம் நமது கடமை எது என்று உணர்ந்து பணி செய்வோம்.


1 கருத்து: