அன்பிற்குரிய சகோதரர். கவிஞர். ஆசிரியர். சோலச்சி அவர்களின் கை வண்ணத்தில் "ஆப்பையால ஒரு அடி" கவிதை நூல் வெளியிட்டு இருக்கிறார். அவர்களின் திருகரங்களால் புதுகை புத்தக கண்காட்சியில் வாங்கிய போது. ஒரு நூலை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு ஞானம் இல்லை. எளிய தமிழில் எல்லோரும் படிக்கும் வகையில் கவிதை அமைய பெற்றுள்ளது. இதில் என்னை ஈர்த்தது ஒரு சில கவிதை வரி.
1) இடியாய் முழங்கு :-
திசைகள் எட்டும் முழங்கிடு-
தமிழைச் சீண்டுவோர் கதி கலங்கி ஓடட்டும்..
2) அதிகாரத் திமிர்:-
அதிகாரத் திமிர் அழிவைக் கொடுக்கும்
உரிமைக் குரல் போரைத் தொடுக்கும்.
3) தோழா:-
அவன் போட்ட தண்டவாளத்துல இரயிலு போகுது
இவன் கட்டுன பாலத்துல விரிசல் போகுது..
இப்படி பல கவிதைகள் இடம் பெற்றுள்ளது. ஆர்வத்தோடு கவிதை நூலை வாசித்து .. நம்ம ஊர் கவிஞரின் பெருமையை.. உலகம் புகழ் பாட செய்யுங்கள்...

ஆசிரியர் மாணிக்கம் அவர்களுடன்
வாழ்த்துகளுடன்
உங்கள் நான் (ஆசிரியர். மாணிக்கம். மெரிட் பயிற்சி மையம்)
கவிதை நூலை வாங்கி வாசிக்க:
செங்காந்தள் சோழன் பதிப்பகம்
+91 98657 80742
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக