வியாழன், 17 நவம்பர், 2016

நல்ல மனம் ....

நல்ல மனம் கொண்ட
மனிதர்களாலே
உலகம் வாழுது தம்பி...!

இங்கே
ஒவ்வொரு மனுசனும்
போதையினாலே
நாளும் வாழுறான்
வெம்பி...!

மது பழக்கமும்
புகைபிடி பழக்கமும்
பொல்லாத போதை தம்பி ...!

காம மோகமும்
காசு மோகமும்
நல்ல பாதையில்ல தம்பி ...!

வெள்ளம் திரண்டு
வந்தால் கூட
அணை கட்டி
தடுத்திடலாம்...!

உன்
தகாத ஆசை
திரண்டு வருதே
தடுக்க வழி என்ன
செய்திடலாம்....!

காலங்கள் இப்படி
கழிந்தால்
காத்திட முடியாது....!

உன்னை நீயே
காக்காவிட்டால்
வாழ்க்கை விடியாது....!

           - சோலச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக