புதன், 16 நவம்பர், 2016

என்ன பெண்ணடி....

உன் ஐந்தடி உயரம்
சிந்தடி பாடுது
அந்த இரண்டு கண்கள்
என்னடி தேடுது...

காகித விரிப்புகள்
கைகளை தீண்டுதே
காதல் கடிதம்
எழுதச் சொல்லி
அவைகள் வேண்டுதே...

என்ன பெண்ணடி
உன்னை
கண்ணாடி ரசிக்குது...

உன் பேரழகு கண்டு
பெண்ணினம் வியக்குது...

விளைந்த நெல்மணி
வயலில் நாணுதே
என்னுள் நுழைந்த பெண்மணியே
ஏதேதோ தோணுதே....!

          - சோலச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக