ஞாயிறு, 27 நவம்பர், 2016

புத்தகம் ....!!! - சோலச்சி

கவிதை

           புத்தகம் ......!!!

வாயில்லாமல் நம்மை
வாழ வைக்கும் தோழன்..!

வாழ்வின் உயிரோட்டம்
உண்மையில் ஒளி..!

பொருட்செல்வம்
உழைப்பால் வருவது...!
கல்விச்செல்வம்
நல்லுணர்வால் மலர்வது...!

சிதருண்ட மனிதனை
சிந்திக்க வைப்பது ...!

அறியாமை இருளை
அகற்றி அரவணைப்பது...!

தான் என்ற அகந்தையை
நாணச் செய்வது...!

பேதம் பார்க்காது
பேணிக் காப்பது ...!

போட்டி பொறாமை
கிடையாது
புன்னகையோடு ஏற்பது..!

சாதி மதம்
ஏழை பணம் பார்க்காது..!

காகித ஏடுகளில்
பொறிக்கப்பட்ட
கல்வெட்டு...!

வயதில்லை
அளவில்லை
வாழ்நாளெல்லாம்
வரவேற்கலாம்...!

வாசிக்கும் நேரம்
வாழ்வின் உன்னத நேரம் ...!

நல்ல நூல்களைத் நாடு
நாளும் மலர்வாய் புகழோடு...!

        - சோலச்சி
               புதுக்கோட்டை
               பேச : 9788210863

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக