வெள்ளி, 20 ஜனவரி, 2017

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக...

வென்று தலை நிமிர்வோம்....!!!

        2009 ஆம் ஆண்டில்  நம் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்டபோது போர் நிறுத்தப்பட்டது என்ற வஞ்சக சூழ்ச்சியால் தமிழகத்தில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது... அதன் விளைவு பல இலட்சம் உறவுகளை இழந்ததுதான் மிச்சம். அப்போது ஆண்ட தமிழக அரசு பதவியை தக்க வைத்துக்கொள்வதில்தான் குறியாக இருந்தது...

     அதேநிலைதான் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற போராட்டத்தையும் மழுங்கடிப்பதற்கான வேளையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது. தற்போதைய தமிழக அரசும் பதவியை தக்க வைத்துக்கொள்வதில்தான் குறியாக இருக்கிறது. அவசர சட்டம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறக்கும் செயல். நிரந்தர சட்டம் ஒன்றே நிரந்தர தீர்வாகும்.

      நிரந்தர சட்டம் இயற்றும் வரை போராட்டம் எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கக்கூடாது. தொடர் போராட்டத்தின் மூலம் காவிரி,  முல்லைப் பெரியாறு. கிருஸ்ணா நதி பிரச்சினை,  மீத்தேன் உள்பட அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதாக அமைய வேண்டும்.

      தமிழ்நாடு சுரண்டப்படுவதை தடுத்து, மாநில வளங்கள் பாதுகாக்கப்பட்டு தமிழக கலாச்சாரம் பண்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும். இழந்ததை மீட்டெடுப்போம்... மாணவர்களின் போராட்டம் வெல்லும். மாணவர்களால் தமிழக துயர் தீரும். வென்று தலை நிமிர்வோம் உறவுகளே....

    (இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தோழர்களுடன் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியபோது....)

3 கருத்துகள்: