வியாழன், 19 ஜனவரி, 2017

போராட்ட களத்தில்....

அன்புமிக்க உறவுகளே....
         பால் அதிகம் தருகின்றது என்ற வணிக நோக்கத்தில் நாட்டு மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பிவிட்டு கலப்பின பசுக்களை கைகளில் ஏந்திக்கொண்டதன்  விளைவுகளில் ஒன்றுதான் இன்று வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கலாச்சாரம் பாரம்பரியம் என்ற பேசுகின்ற நாம் சில அடிப்படைகளை மறந்து போகிறோம். கலப்பின பசுக்கள் பிராய்லர் கோழிகளைப் போன்றவை. போராடுவதோடு நின்றுவிடாமல் நாம் இனி செய்ய வேண்டியது கலப்பின பசுக்களை கசாப்புக்கடைக்கு அனுப்பிவிட்டு நாட்டு மாடுகளை வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.
    அப்படியே வெளிநாட்டு குளிர்ப்பான நிறுவனங்களை விரட்டி அடித்துவிட்டு நீர் வளமும் காப்போம் உறவுகளே.....
       - சோலச்சி புதுக்கோட்டை
   (சிவப்பு நிற பதாகையை ஏந்தியபடி நேற்றைய 19.01.2017 போராட்டக்களத்தில் சோலச்சியும்...)

3 கருத்துகள்: