புதன், 11 ஏப்ரல், 2018

பேசு தலைவா...... -சோலச்சி


               முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்


பேசு தலைவா பேசு 
உந்தன் கனத்த குரல் தொடுத்து பேசு 
எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பொன் உதட்டில்
 தூரி ஆடிய கதை பேசு.... 


எழுதுகோல் புனைந்த வசனங்கள் 
எல்லோர்க்கும் வாய்க்குமா பேசுங்கள் 
எடுத்து வைத்த காலடிகள் 
படைத்த சரித்திரம் பற்றி பேசுங்கள்... 

திமிறி எழுந்த உந்தன் நெஞ்சு 
காணாமல் தெருவில் நுழைந்தது பல நஞ்சு 
நையப்புடைத்து நானிலம் காக்க
நற்றமிழ் சொல்லெடுத்து பேசுங்கள்.... 

குளித்தலையில் நீராடி திருவாரூரில் தேரோட்டி 
திசையெங்கும் உன் வசம் செய்தாய் 
தீந்தமிழுக்கே தேன்சுவை நெய்தாய்... 

எல்லாம் யோசித்து எழுதிக் குவித்தாய்
எதை யோசித்து மௌனம் காத்தாய்... 

நிற்காது சுழலும் நீயொரு பூமியல்லவா 
நில்லாமல் பேசு தலைவா பேசு 
சொல்லாமல் அழுகிறது சொற்களெல்லாம்.... 
உந்தன் சொந்தங்களெல்லாம்.... 

                        -சோலச்சி புதுக்கோட்டை

1 கருத்து: