சனி, 14 மே, 2022

வாழ வேண்டும் முறைப்படி - சோலச்சி

 சத்தியமா புத்தியிருந்தா

பொழச்சுக்க தம்பி - இது

சத்தியவான்கள் வாழ்ந்த பூமி

உண்மையை நம்பி

குமரி முதல் இமயம் வரை இருக்குது நாடு

பண்பாட்டை விளக்கிச் சொன்ன

இந்தியத்திருநாடு.....


அரசாங்க வேலையத்தான் நம்பிட வேண்டாம்  - நீ

அடாவடி செய்துதானே

வாழ்ந்திட வேண்டாம்

காசிருந்தா கடவுளையும் வாங்கிட முடியும் - நம்ம

துன்பங்களும் பூமியிலே எப்படா முடியும்.....


ஏசியிலே வாழுறது நாம இல்லடா - இங்கே

ஏசியத்தான் செய்யுறோமே நம்ம கையிலடா

பாடுபட்டு உழைக்கிறோமே பஞ்சம் தீரல

பஞ்சப்படி ஏதும் இல்லே நெஞ்சம் ஆறல....


இலவச சலுகைகளை வழங்குது அரசு

இடையில் லட்சம்தானே கொட்டுது முரசு

தகுதி திறமை மோசடியும் நடக்குது தம்பி

தரம் பார்த்து நடக்கலனா ஆகிடுவ வெம்பி....


சாதிய மோதல்களை தூண்டி கெடுக்குறான்

நீதியை நிதி கொடுத்து நிலையை ஒடுக்குறான்

நிலைகெட்ட பூமியிலே நிற்பதெப்படி - நாம

நேயத்தோடு வாழ வேண்டும் முறைப்படி.......


          - சோலச்சி அகரப்பட்டி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக