புதன், 18 மே, 2022

செவந்த ரோசாவே - சோலச்சி அகரப்பட்டி

 


ஆலம் விழுதிலே என்னை ஆட்டி விட்டவளே
நடுச்சாமத்திலே சோறு ஊட்டிவிட்டவளே
அந்தக களத்து மேட்டிலே என்னை வருடிப் போனவளே
யாரும் பார்க்குமுன்னே நெஞ்சை திருடிப் போனவளே....

படிக்கும் காலத்திலே அந்த நெனப்பு தோணலயே
பழக பழகத்தான் இப்ப என்னைக் காணலயே
அரும்பு மீசையிலே அந்த அருவி கொட்டயிலே
குறும்பு பண்ணயிலே அந்தக் குருவி சேட்டையிலே
சுடிதாரு மாட்டலையே சில்க் சேலை கட்டுறீயே
கூரைப் புடவைக்குள் என்னை சுத்துறீயே.......

நெஞ்சுக் குழியிலே உன்ன தச்சு வச்சுருக்கேன்
மூவஞ்சு வயசிலே உன்ன முடிச்சு வச்சுருக்கேன்
ஆசை வார்த்தையிலே என்னை அணச்சுக் காப்பவளே
ஒட்டுப் பசையப்போலவே ஒட்டி கோர்ப்பவளே
ஆசை வச்சவளே நாளும் ஆசை வச்சேனே
வேசமில்லாமல் உசுர வச்சேனே.....

செவந்த ரோசாவே சிரிக்கும் மல்லிகையே
உன்னத் தவிரத்தான் உள்ளே யாருமில்லையே
ஆத்தங்கரையிலே நாம மறஞ்சு பேசயிலே
நவ்வா மரத்திலே நாம கொஞ்சி பேசயிலே
மடியில் தூங்க வச்ச என்ன நொடியில் ஏங்க வச்ச
இப்ப ஒன்னா சேரத்தான் தேதி நல்லா குறிச்சு வச்ச....

        - சோலச்சி அகரப்பட்டி

1 கருத்து: