ஞாயிறு, 29 மே, 2022

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

 

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டம் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய இரண்டு நாள் கல்வி கண்காட்சி விஜய் பேலஸில் 2022 மே28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது.




 விழாவின் நிறைவு நாளில் சாதனை புரிந்தோருக்கான விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அவர்கள்,  காரைக்குடி அழகப்பா மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா அவர்கள்,  தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இலக்கிய தாளாளர் டாக்டர் சலீம் அவர்கள்,  கலைஞர் தமிழ்சங்கம் அண்ணன் சந்திரசேகர் அவர்கள், திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அவர்கள், எங்கள் பேராசான் பேராசிரியர் விஸ்வநாதன்  அவர்கள், மரம் நண்பர்கள் சமூக ஆர்வலர் கார்த்திக்மெஸ் மூர்த்தி அவர்கள்,  எழுத்தாளர் இராமுக்கண்ணு, புதுகை பண்பலை நிறுவனர் அன்புச் சகோதரர் டாக்டர் விஜிக்குமார் அவர்கள், உலகக் கவிஞர் பீர்முகமது அவர்கள், அன்பு நண்பர் சிகரம் சதீஸ்குமார் அவர்கள்,  அன்புத் தம்பி கவிஞர் மலையப்பன் அவர்கள்,  இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி அவர்கள், திருக்குறள் கழகம் இராமையா அவர்கள்  மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இலக்கிய சமூக ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டனர்.    விழாவின் ஏற்பாடுகளை புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனர் தோழர் சிவசக்திவேல் அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். 




விழாவில் சோலச்சிக்கு ''சமூக எழுத்தாளர் விருது'' வழங்கி பெருமை செய்யப்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

2 கருத்துகள்: