வியாழன், 25 பிப்ரவரி, 2016

சோலச்சி யார்....?

வணக்கம் தோழர்களே.....

என் இயற்பெயர் தீ.திருப்பதி

பெற்றோர் க.தீத்தான்_  ஆரியமாலா

பிறப்பு : 19.11.1982

ஊர் :

அகரப்பட்டி
             வயலோகம் அஞ்சல் -            622104
இலுப்பூர் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்

தற்போது :

திருவள்ளுவர் நகர்
புல்வயல் அஞ்சல் -622104
புதுக்கோட்டை மாவட்டம்

செல்:9788210863

நூல் வெளியீடு :

"முதல் பரிசு " எனும் சிறுகதை நூல் சூலை 2015 ல் இனிய நந்தவனம் பதிப்பகம் மூலமாக வெளியிட்டு உள்ளேன்.

மனைவி : ரஞ்சனி
மகன்கள்: திர.ஆரியா
                      திர.ஆதவன்

அண்ணன் : தீ.இரவிச்சந்திரன்

தங்கை : முத்துலெட்சுமி

சோலச்சி என்பது யார் ......?

நான் புதுக்கோட்டை மாவட்டம்  இரா.செ.மே.நி.பள்ளி நச்சாந்துபட்டியில் பத்தாம்வகுப்பு படிக்கும் போது எனக்கு அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர்தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் வழியில்லாமல் வறுமையில் வாடி வதங்கியபோது என் ஆசிரியர் அவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். மறுக்காமல் எங்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

நான் என் ஆசிரியர் வீட்டுக்கு சென்றபோது என்னைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக்கொண்டு இருந்தனர்.  ஆங்கிலம், கணக்கு,  அறிவியல்  சொல்லிக்கொடுப்பார்கள். நானும் கலந்து கொண்டேன். அன்று அவர்கள் உதவி புரியவில்லையென்றால் என் படிப்பும் பாதையில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு தவித்துக்கொண்டிருந்த என் தாயையும் குடும்பத்தையும் காக்க என் அண்ணனோடு பிழைப்பு தேடி அலைந்திருப்பேன்.

என்னை உயர்த்திய என் ஆசிரியர் அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக "சோலச்சி " என்று வைத்துக்கொண்டேன். என் ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பை சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

-நட்பின் வழியில்

சோலச்சி
புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக