சனி, 11 ஜூன், 2016

புறம்போக்கு ..... - சோலச்சி

"அறியாமல் குடிபுகுந்தேன்
அடிபட்டு உணர்ந்தேன்
வெளியேறிவிட்டேன்
அந்த
புறம்போக்கு நிலத்தை விட்டு ...!

பட்டா போட்டது போட்டதுதான்
தங்கியே ஆக வேண்டுமென
தடாலடி செய்கின்றன
தருதலைகள் சில....!

வம்பு செய்வது - பொய்
வழக்கு தொடுப்பதென
திட்டமும் தீட்டுகின்றன
தீவெட்டிகள் சில.....!

புறம்போக்கை
புறம் தள்ளியபடி
நீளுகிறது
என் பயணம்...!

தகாத நிலத்தை
தான் ஏற்பது
தர்மமல்ல...!

தருதலைகள்
தடை போடட்டும்....!

தானாய் உடைபடும்...

தான் யார் என்பதும்
புலப்படும் ....!"

      - சோலச்சி
         புதுக்கோட்டை

1 கருத்து: