திங்கள், 2 ஜனவரி, 2017

ஊரு உலகம் ...... - சோலச்சி

               பாடல்....!!!
ஊரு உலகம் மெச்ச நானும்
ஊட்டி வளர்த்த செல்ல மகள
ஒத்தையடி பாதையிலே தவிக்க வச்சேனே
நான் தவிக்க வச்சேனே.....
நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பார்க்கலையே........
      
                                                  (நான்...)

சிட்டா திரிஞ்ச ஏம் பொண்ண
சிங்கபூரு மாப்பிள்ளைனு கட்டி வச்சேனே...
சீர் வரிசையோடு சீதனமா
மாடி வீடும் கட்டிக் கொடுத்தேனே ...
இப்ப மாடிவீடும் காலியாச்சு
மார்வாடி கடைக்கு போயிருச்சு...
நகையெல்லாம் கொடுத்துப்புட்டு
அழுகையோடு தவிக்கிறா....
மாப்பிள்ளை தண்ணியிலே மிதக்கிறார்.....
                                                    (நான்....)





காடு கரையெல்லாம் வித்துப்புட்டேன் - அந்த
காசுக்கு பைக்கும் வாங்கித் தந்தேன்....
காரு ஓட்டும் நெனப்புலதான்
காத்தா பறக்கிறார்....
எம் மக தினமும் பதறுறா...
சிங்கப்பூர் செண்ட்டும் தீர்ந்துருச்சாம்
முக்கால் டவுசர் பேண்ட்ட போட்டு
நல்லா மினுக்குறார்...
எத்தன நாளைக்கு இந்த கூத்து
மகளோட கண்ணீர பார்த்து
நாளுபூரா நானும் ஏங்குறேன்.... 
                                                          (நான்...)

வெளிநாட்டு மோகத்திலே
வேலைக்கு போறத நிறுத்திட்டார்...
"எப்ப விசா வந்து நீங்க கிளம்பி போவீகளோ
கூலி வேலை செய்யத்தானே
கடல் கடந்த போற மச்சான்....
இங்கே நாமும் வேலை செஞ்சு
நாள கடத்தாலாம் "
எம்மக சொல்லி முடிக்கயிலே
சோத்துப்பானை உடைஞ்சு சிதறுது...
பொண்ண பெத்த எம்மனசு புலம்பி தவிக்குது.....!
                                    (நான் போட்டோ..)

          - சோலச்சி புதுக்கோட்டை

12 கருத்துகள்:

  1. சோகம்2நிறைந்த3பாடல்4பல5வீடுகளில்6இன்றும்7காண்பதே.

    பதிலளிநீக்கு
  2. சோகம்2நிறைந்த3பாடல்4பல5வீடுகளில்6இன்றும்7காண்பதே.

    பதிலளிநீக்கு
  3. சோகம்தான்.. பல இடங்களில் கேள்விப்படுவது. அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு