ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கல்பாக்கம் புதுச்சேரியில் .....

  மிகவும் மகிழ்வான தருணம்....

   ஞாயிற்றுக் கிழமை (29.01.2017)  காலை கல்பாக்கம் புதுப்பட்டிணம் சாலோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் நானும் என் அண்ணன் கவிஞர் புதுகை தீ.இர வும் கலந்து கொண்டோம். புதுப்பட்டிணம் என்றாலே நண்பர் கவிஞர் லெட்சுமணன் தான் நினைவுக்கு வருவார். நண்பர் லெட்சுமணன் அன்போடு வரவேற்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அடுத்து கல்பாக்கம் என்றாலே தோழர் கவிஞர் முத்து விஜயன் தான்.   எங்களோடு அவரும் கலந்து கொள்ள இலக்கியம் குறித்த கலந்துரையாடல் தொடங்கியது.  தோழர் முத்துவிஜயன் இலக்கிய ஆளுமை நிறைந்தவர். தோழர்கள் இருவரையும் பத்தாண்டுகளுக்கு முன்னால் கவிஞர் சேலம் சுமதி அவர்கள் சேலத்தில் ஏற்பாடு செய்திருந்த கவிஞர்கள் சந்திப்பு நிகழ்வில் சந்தித்தது.  மீண்டும் இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிகழ்கால இலக்கிய நகர்வு குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். தோழர் கவிஞர் முத்துவிஜயன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுகிறார். வேறு ஒரு இலக்கிய நிகழ்வுக்கு தோழர் முத்துவிஜயன் செல்ல வேண்டி இருந்ததால் தோழர் லெட்சுமணனுடன் மதியம் சுவையான பிரியாணி சாப்பிட்டோம்.
     தோழர் லெட்சுமணனின் அன்பில் நனைந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அப்படி ஒரு அன்பான உபசரிப்பு.  மீண்டும் மூவரும் சமகால நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டோம். பிறகு தோழர் லெட்சுமணனிடமிருந்து விடைபெற்று எங்கள் பயணம் புதுச்சேரிக்கு சென்றது.
      கடற்கரை வாசலில் தலைமை செயலகம்.  தூய்மையான நகரை நோக்கி சென்று கொண்டு இருப்பதை காண முடிந்தது. அண்ணல் அம்பேத்கார் மணிமண்டபத்தை சுற்றிப் பார்த்தோம். கடற்கரையும் கடல் அலையும் நம் கைகளை குலுக்கி விட்டுச் செல்வது போன்ற உணர்வு.

    எங்களின் ரசிக்கும் திறனை பார்த்த காவலர் ஒருவர் புதுச்சேரி தமிழ்நாட்டிலிருந்து எப்படி மாறுபட்டு இருக்கிறது என்றார். எல்லாமே சிறப்புதான்... என்ன ஒரு வித்தியாசம்னா.... தமிழ்நாட்டுல அரசாங்கம்  வாங்கி விக்கிது (டாஸ்மார்க்). புதுச்சேரி அரசு காய்ச்சி விக்கிதுனு சொல்லவும் மனுசன் சிரிச்சுக்கிட்டே போய்ட்டாரு. ஆமாங்க அங்க சாராயக்கடைனு பெயர் பலகையோடு வியாபாரம் படுசோரா நடக்குது.
   புதுச்சேரி அரசிடம் மிகவும் பிடித்த நிகழ்வு ஒன்று.  கடற்கரை சாலையில் ஓட்டுப்பெட்டி ஆங்காங்கே வைத்துள்ளார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த விண்ணப்பம் உள்ளது.  அதில் புதுச்சேரி அரசை தூய்மை நகரமாக மாற்றவும் மிகச் சிறந்த சுற்றுலாத்துறையாக மாற்ற என்ன செய்ய வேண்டும், எந்தெந்த பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று விண்ணப்ப படிவத்தில் கேட்டிருக்கிறார்கள்.  புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகள்.
   அடுத்த முறை ஒருநாள் பயணமாக சென்று புதுச்சேரி முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும் (இந்திய விடுதலையில் மிக முக்கியமான இடம் அல்லவா) என்ற ஆசையோடு  இரவுக்கு வழிவிட்டு விடைபெற்றோம்.

6 கருத்துகள்:

  1. புதுவை அற்புபுதமான ஊர். நெய்வேலி யிலிருந்து பல முறை சென்றதுண்டு.

    பதிலளிநீக்கு
  2. ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன்
    நினைவைலைகள் மீண்டும் மனதில் வலம் வருகின்றன
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு