சனி, 14 ஏப்ரல், 2018

யாரால்..... -சோலச்சி

                   யாரால்......?????

                           -சோலச்சி புதுக்கோட்டை 

மாலை நேரம்
சிறு குருவிகளின் குரலோசை
சின்ன மூங்கிலின் குழலோசை
அழுகின்ற சத்தம்
அது
ஆற்றுநீரின் யுத்தம்...!

வயதோ அறுபது
பெயரோ அழகரு....
பரந்த பெரிய ஆலமரம்
நிழலின் மடியில்
நித்திரைக்கு போனார்
கடந்த வாழ்வினை
நனவாய் கண்டார் ...!

பால்வாடி போகாமல்
பள்ளிக்கூடம் போனது முதல்
பருவம் கொஞ்சம் தொடங்கியது
பகல் நனவு மெல்ல துவங்கியது....!

எட்டு படித்து ஒன்பது என
பள்ளி வாழ்க்கை ஆரம்பிக்க...
பருவ மங்கையவள் கண் அசைக்க
காதல் சொல்ல இவன் துடிக்க
வகுப்பு பத்தும் இவன் முடிக்க...!







எப்படி காதலை எடுத்தியம்ப
என்றே மனம் புலம்ப...
சொல்லாதிருந்தால் தப்பையா
சொல்லு என்றான் நண்பன்
கருப்பையா....!
விடை நான் தருவேன்
விடைகொடு எனக்கு
என்றே உரை தொடுத்தாள்
தோழி தமிழ்ச்செல்வி ...

கிறுக்கன் அழகருக்கு
கிறுக்கி எவளும் கெடைப்பாள்
நறுக்கிட்டேன் நம் நட்ப
முறுக்கினாள் காதலி
லீலாவதி ...!

அவளின் உரை கேட்டு
அழுதான்
அழகு விரலால்
அதை துடைத்தான்....
தோழன் அழகரு
துவண்டு விடக் கூடாதென்று
சிரித்தே முகம் சிவந்தாள்
சித்திரப்பாவை தமிழ்ச்செல்வி....

அழகான நண்பன்
ஆறுதல் சொன்னான்
வடிவேலன்...
இருவரும் பேருந்தில்
ஏக்கத்துடன் பயணிக்க....
நண்பன் ராகவன்
இவன் கவிதை படிக்க...

இளைய முகம் ஒன்று
அழகர் முகம் பார்க்க
கொடுங்க அதை என்றே
அவள் கரம் நீட்ட....
கொடுத்தான் அழகரு
விழித்தான் திருதிரு....!!!

இளைய முகம் அவள்
இவன் முன்னே வந்து
இந்தாங்க கடிதம்
இன்னும் எழுத
எப்பவும் துணையாவேன்
என்றே அவள் சிரித்தாள்
காதல் நெஞ்சை
வளர்த்தாள்....!

பிரித்தவன் மயங்கினான்
படிக்கவே தயங்கினான்
மலரை வண்டு கொஞ்சும்
மணம் அதை கொஞ்சும் - என்
மனம் உன்னில் தஞ்சம் ...!!?
என்ற கவிதை மயங்க வைத்தது
அதனால் அவனை
தயங்க வைத்தது....!!!

ஏன் நண்பா கலக்கம்
இது வாலிப குழப்பம் ...
நீனாக கேட்கவில்லை
அவளாக கேட்கிறாள்
இது உடையாதது
நீயும் காதலி என்றான்
மலர் தூவி நின்றான்
தோழன் வடிவேலன்...!!!

அறியாத அவள் வந்து
அத்தனையும் இதிலிருக்கு
மொத்தமாய் எடுத்துக்கங்க
முத்தம் நூறு கொடுங்க
பத்திரமா மனசுக்குள்ள
பக்குவமா வச்சுக்கிறேன்
கண்களால் பேசி
கடிதாசி தந்தாள்....!!!!

உன்னையே நம்பி
உயிர் வாழும் கீதா...
நீ என்னை நீக்கினால்
என் உயிர் நீங்கிடும்
உன் பதிலை சொல்லிடு
என்னை அணைத்திடு
உருக்கமான பதிலை
சுருக்கமாக தந்திருந்தாள்
அழகரு பதிலுக்கு
காத்திருந்தாள்....!!!!

இருவரும் ஒருவராய்
உடல்கள் பிரிந்து
உள்ளம் இணைந்து
வாழ்ந்தனர்
காதலிலே மிதந்தனர்.....










ஆள்மாறிய காதலை
அழகரு சொல்லலையே
என்றே தமிழ்ச்செல்வி
அரட்டை அடிப்பாள்
ஆனந்தக் கடலில்
துள்ளிக் குதிப்பாள்....

முதல் காதலை சொல்லிடு
முறையிட்டான் தோழன்
கருப்பையா....
சொன்னதுதான் தாமதம்
வெடித்ததோ விபரீதம்
அவளோ வெறுத்தாள்
அழகரோ விரும்பினான்
வேதனையில்  துடித்தான்
பள்ளியில்
வேகத்தோடு படித்தான்....!!!!

நீயாக கேட்கவில்லை
அவளாக கூடினாள்
விரும்பியவள் வெறுக்கிறாள்
வேண்டாம் வேதனை
செய்திடு சாதனை...
வடிவேலன் கருப்பையா
தோழி தமிழ்ச்செல்வி
உரையும் தொடுத்தனர்
உண்மை நட்பை
உணர்த்தினர்....

வழக்கிறிஞராய்
வளமுடனே வாழ்ந்து வந்தார்
அழகான மனைவியோடு
அமைதியாக வாழ்ந்து வந்தார்.......

நீ உயர
காதலா....??? நட்பா....???

மனம் கேட்டது கேள்வி...

சொல்ல நினைத்து கண்திறந்தார்
பேரக் குழந்தைகள் கண்டு
பதிலையே மறந்தார்....

பதிலை மறந்த அழகருக்கு
பதில் தருவது - உங்கள்
மனக் கணக்கு.....!!!!

    -  சோலச்சி
       புதுக்கோட்டை
       பேச : 9788210863

6 கருத்துகள்:

  1. கவிதை வரிகள் அழகு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. வாவ் ... அண்ணா... பொருத்தமான படமும் வச்சிருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  3. இதுபோன்ற அனுபவத்தை பலர் பெற்றிருப்பர்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான கவிதை அண்ணா‌

    பதிலளிநீக்கு