ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஸ்டெர்லைட் - சோலச்சி

வாழ்வாதாரம் காக்க போராடினோமே


வாசல் கதவை உடைப்போமென்றோமே


வழியில் துணிந்து சென்றோமே


விரைந்து மூடச் சொன்னோமே...

இடைமறித்து ஏந்தி நின்றாயே


விடைதெரியாது விழித்தோமே


இமைக்கும் நேரத்திலே


இதயமின்றி சுட்டுக்கொன்றாயே....

ஏன் சுட்டாய் கேட்டோமே -இந்தியக்


கடல் பொங்க கண்ணீர் விட்டோமே


ஆடத்தெரியாதவன் தெருக்கோணலென்ற


கதையாய் அளக்கின்றாயே....

கூலிகளைக் கொன்று குவிக்க


கைக்கூலியாக போன உன்னை


அய்யோ பார்த்து கெட்டோமே


அன்று அறியாது இயந்திரம் தொட்டோமே....

எதிரே இருப்பவனும் அன்று சுட்டானென்று


புள்ளி விபரம் காட்டுகின்றாய்


கரும்புள்ளியைக் கூட்டுகின்றாய்....

சுதேசி கப்பல் விட்ட மண்


சுக்குநூறாய் போனதென்ன....

திக்கற்று தேசம் போவதற்குள்


இக்கணமே எழுவீரே


இனமான தோழர்களே......

-சோலச்சி


2 கருத்துகள்: