ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தாயே வணங்குகிறேன் - சோலச்சி

தாயே வணங்குகிறேன் .....
கல்வியின் பயனைக் கற்றபோது
கையில் காசு இல்லை ....

கைவிட்டு விடலாமா கல்வியை
கலங்கி நின்றேன்......!
கல்வியில் தேவதையொன்று
கண்முன் காட்சி தர
களிப்பு வரப்பெற்றேன்....!

எழுதுகோல் முதற்கொண்டு
எல்லாச் செலவும் ஏற்று
என்னில் ஒளியேற்றிய
ஏற்றமிகு தாய்தான்
திருமதி.எஸ்.சோலச்சி அவர்கள் ...
பள்ளிக்கு ஆசானாய்
எனக்குத் தாயுமாய்....!

பத்து தொடங்கி பனிரெண்டாம் வகுப்பு
என மூன்றாண்டு செலவுகள்
புனிதத் தாயினைச் சேரும்...

வாழ்க்கைப்
பிரச்சினையில் தள்ளாடி
நின்று தவித்தபோது - எங்கள்
தாகம் தீர்த்த தர்மத்தாய்...!

உணவு முதற்கொண்டு
உலை வைக்கப் பாத்திரம்
தட்டு முதல் என் தாய்க்கு
சேலை வரை....!

அரிவாள்மனை முதல்
அயர்ந்து உறங்கப் போர்வை என
வீட்டுச் சாமான்கள்
விதவிதமாய் தந்து - எங்களை
வாழ வைத்த ஒளிவிளக்கு...!

நான் ஆசிரியராக வரவேண்டும்
என ஆவல் கொண்டு
ஏழைச் சின்னவன்மீதும்
ஏற்றமிகு பாசம் கொண்டு....!

ஆளாக்கிய புனிதமே
பாத மலர்களில் என்னைச்
சமர்ப்பித்தேன்....
தாயே வணங்குகிறேன்
தாயே வணங்குகிறேன் ...!

        - சோலச்சி
[ எனது காட்டு நெறிஞ்சி -மே 2016 கவிதை நூலிலிருந்து .....]

2 கருத்துகள்: