திங்கள், 17 செப்டம்பர், 2018

மழைக்காலம் - சோலச்சி

                        மழைக்காலம்

வீட்டினுள் நுழைந்த
வெள்ளத்தை
விரட்டிக்கொண்டு
இருந்தான் அவன்.....!
மழையாய் விழுந்து
மழலை வெள்ளமாய் மாறிய
அந்த
நீர்க்குழந்தை
மீண்டும்
அத்துமீறியபடியே.....
அணைகட்டி தடுத்தும்
அமைதியாகவில்லை.....
பொறுமையாய்
விளையாடிய
அந்தக் குழந்தை
பேச தொடங்கியது ....



'' என்
அரியணையில் நீ......
வெளியேற்றப்பட வேண்டியதும்
நீயே.....!
தாராளமாய்
தங்க வேண்டிய நான்
தரிகெட்டு அலைகிறேன்
தார்ச்சாலையெங்கும்.....
எனது இல்லங்கள்
இருந்திருந்தால் - நீ
நிர்வாணமாய்
நிவாரணம் கேட்கும்
நிலை எதற்கு.....?
நீர்க்குமிழியின்
நீள உரை கேட்டு
திடுக்கிட்டான்.....!
நீர்நிலைகளும்
வயல்காடும்
கட்டடங்களைச் சுமந்தவாறு......
அனாதையாய்
ஓடிக்கொண்டிருந்த
அந்த
நீர்க்குமிழிக்குள்
மண்டியிட்டு முத்தமிட்டான்.....
"உன்
அரியணையில் நான்...."
மன்னிப்பு கேட்பவனாய்....
விழியின்றி தவித்தபடி
நகர வீதிகளில்
மழைக்காலம்.....!!!
              - சோலச்சி
                பேச : 9788210863

2 கருத்துகள்: