ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஆயுத எழுத்து - சோலச்சி

ஆயுத எழுத்து......

சோத்துக்கு இல்லையெனினும்
சொம்படிக்கும் வித்தைகளை
கற்றுத்தராதே.....

மாத்திக்க துணி இல்லையெனினும்
மண்டியிடும் நிலையினை
பெற்றுத்தராதே....

உழைப்பைச் சுரண்டும் ஊதாரிகளின்
கொட்டம் அடக்கும் சூத்திரம்
கற்றுக் கொடு.....

பொய்யுரைப்போர் மனங்களெல்லாம்     
பொசுக்கும்படியான கவிதைகளை
அளவின்றி அள்ளிக்கொடு....

சாத்திர பொய்யர்களின்
கதாபாத்திரங்கள் கட்டுக்கதையென
உலகறியச் செய்துவிடு....

பாசாங்கு இல்லாத
என் எழுத்து
இந்த பாருக்கோர்
ஆயுத எழுத்து...!!!

            -சோலச்சி

1 கருத்து:

  1. உண்மை நண்பரே
    பாசாங்கு இல்லாத
    தங்கள் எழுத்து
    இந்த பாருக்கோர்
    ஆயுத எழுத்து...!!!

    பதிலளிநீக்கு