வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பித்துப் பிடிக்க வச்சவள... - சோலச்சி




கவிதை ஒன்னு எழுதி வச்சேன்
ரொம்ப நாளா
கண்டு நீயும் கருத்துச் சொல்லு
எந்தன் தோழா....


என்று நானும் சொல்லித்தானே 
எடுத்து தந்தேன்
எப்படியோ அவ கைக்கு போனது அன்று...!


அறியாத பொண்ணு அவ 
அருகில் வந்தாள்
அழகான கடுதாசி நீட்டிச் சொன்னா....


ரொம்ப நல்லா புடுச்சுருக்கு 
இன்னும் எழுத
எப்பவும் துணையாவேன் 
அன்பு தோழா....!






சிரிச்ச முகம் சிரிச்சுக்கிட்டே 
போனதம்மா
காதல் சிறையில்தான் பூட்டிவச்சு 
போனாளம்மா....


கண்ணாலே பேசி வந்தோம் 
ரொம்ப நாளா
கடுதாசிக் கொடுத்துக்கிட்டோம் 
கொஞ்ச நாளா....


பள்ளி நாட்கள் முடியத்தானே 
நேரம் வந்தது
பாவி அவ மனசுதானே 
முள்ளானது....



குத்தியிருந்தா பிடுங்கி நானும் 
எறிஞ்சிருப்பேன்
பித்துப் பிடிக்க வச்சவள 
என்ன செய்ய ........!!!

                           - சோலச்சி  புதுக்கோட்டை 

1 கருத்து: