சனி, 17 ஆகஸ்ட், 2019

நல்ல மனம் கொண்ட - சோலச்சி


நல்ல மனம்...... சோலச்சி






நல்ல மனம் கொண்ட மனிதர்களாலே
உலகம் வாழுது தம்பி.....

இங்கே ஒவ்வொரு மனுசனும்
போதையினாலே
நாளும் வாழுறான் வெம்பி....

புலவன் இங்கே
புலமை என்ற போதையில்
வாழுறான்....

அன்பு போதைதான்
ஆசை போதைதான்
ஒவ்வொரு பாதையும் போதைதான்....

மது பழக்கமும்
புகைபிடி பழக்கமும்
பொல்லாத போதை தம்பி...

காம மோகமும்
காசு மோகமும்
நல்ல பாதையில்லை தம்பி....















உருவத்தைக் கொடுத்த
இயற்கையினாலே
உள்ளத்தை உணர முடியவில்லை....

பள்ளமான வாழ்க்கையினை
பாரில் சரிசெய்ய முடியவில்லை....

வெள்ளம் திரண்டு வந்தால் கூட
அணைகட்டி தடுத்திடலாம்
உன் தகாத ஆசை திரண்டு வந்தால்
தடுக்க என்ன வழி
செய்திடலாம்......

சுரண்டித் தின்பதும்
சுயநலம் கொள்வதும்
நல்ல பாதையில்லை தம்பி....

உலகத்தைப் படைத்த
இயற்கையுமிங்கே
ஓயாமல் நாளும் அழுகிறது....

கலக்கம் செய்யும் மனிதராலே
கண்களை மூடி வாழ்கிறது....

காலங்கள் இப்படி கழிந்தால்
காத்திட முடியாது
உன்னை நீயே காக்காவிட்டால்
உன் வாழ்க்கை விடியாது.....!!!

                     - சோலச்சி



4 கருத்துகள்: