ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

போகிற போக்கில் - சோலச்சி




உனக்கு ஒன்னும் வாங்கித் தரலே



போகிற போக்கில் சாக்கு போக்கு
சொல்லாமல் வாயேன்டி
உன் பார்வை காட்டும் சங்கதி
கேட்க நானும் வாரேன்டி......!

நாளும் பொழுதும் பாராமலே
பாட்டு பாடினோம் - நாம
நடுக்காட்டில் கூட்டாஞ்சோறு ஆக்கி
எதையோ தேடினோம்
தைல மர காத்து உன் தலையில் ஆடுது
பசும் புல்லப்போல உன் உதடு
சிரிச்சு காட்டுது...!

பழைய வயலில் சம்பா நெல்லு
அறுக்க போனோமே
குத்திய சம்பா நெல்ல பிரிச்சு
அரிச்சு தின்னோமே
வாய்க்கால் வரப்பு எல்லாம்
நம்ம கதைய சொல்லுமடி
வாய் திறந்து சொல்லு
நான் துணையா வாரேன்டி....!

















மலையில் கோயில் இருந்துச்சு
கும்பிட தோணல
மரத்தில் அமர்ந்து பேச
நேரம் போதல
வெயில் கூட நம்மல பார்த்து
மழையா வேர்த்து கொட்டுச்சு
மானமுள்ள தமிழர் மனசு வாழ்த்து பாடுச்சு.....!






உனக்கு ஒன்னும் வாங்கித் தரலே
என் மனசு போதுமா
என் உசுர வழி நடத்துவதே
உன் நெனப்பு தானம்மா
என்னை விட்டு நீயும் பிரிவதில்லையே
தென்னை போல ஓங்கி மலர
எதுவும் தடைகள் இல்லையே....!

                         - சோலச்சி

2 கருத்துகள்: