ஞாயிறு, 26 ஜூன், 2022

வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்

 

   வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்



எங்கள் ஊர் 
அகரப்பட்டியைச் சேர்ந்த திரு.இரா.பொன்னையா - இராஜேஸ்வரி இவர்களின் மூத்தமகன் பொ.இராஜதுரை , 2021-2022  கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 439 மதிப்பெண்கள் எடுத்து அரசினர் மேல்நிலைப்பள்ளி வயலோகத்திற்கும் எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்தாண்டு இப்பள்ளியின் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர் இவர்தான்.



    இவரின் தந்தை எலக்ட்ரானிக் வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு துணையாக பல இடங்களுக்கும் சென்று எலக்ட்ரானிக் வேலை பார்த்துக்கொண்டே  பாடங்களையும் படித்து இருக்கிறார். வேலை பார்த்துக்கொண்டே படித்து ஊருக்கு பெருமை சேர்த்த இராஜதுரையை எங்கள் ஊர் அகரப்பட்டி கொண்டாடி மகிழ்கிறது. மாணவர் இராஜதுரையின் கல்விக்கு அரசு உதவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தந்தையைப் போலவே அமைதியின் மொத்தவடிவமாய் திகழும் மாணவர் பொ.இராஜதுரையை நேரில் சந்தித்து மனசார பாராட்டி மகிழ்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக