திங்கள், 27 ஜூன், 2022

மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் கைகளில் கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்

 நெஞ்சம் நிறைந்த நன்றி


இன்று மாலை (27.06.2022) ஆசிரியர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.


சார் வணக்கம்.  ''கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்'' ங்குற நூல் நீங்க எழுதுனதுதானே.


ஆமாம் நான் எழுதுனதுதான். 


உங்களுக்கு வாட்ச்அப்ல ஒன்னு அனுப்பிருக்கேன். பாருங்க சார் என்று சொல்லிக்கொண்டே இணைப்பைத் துண்டித்தார்.


என்னவாக இருக்கும் என்ற யோசனையில் வாட்ச்அப்பை திறந்து பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.



பிறகு நானே தொடர்பு கொண்டேன்.


எனக்கே தெரியாது சார். என் பையன்தான் உங்களோட நூலை கொடுத்துருக்கான். போட்டோ காட்டுனப்பதான் அது நீங்க எழுதுனதாச்சேனு உங்கள தொடர்பு கொண்டேன்  என்றார். மகிழ்ச்சியும் நன்றியும் கூறினேன்.

திருச்சிராப்பள்ளி Nandavanam Chandrasekaran இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியீடு செய்த "கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்'' ராஜபாளையம் மணிமேகலை மன்றம் மற்றும் புதுவை தமிழ்ச்சங்கம் விருது பெற்ற நூல். புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக இருக்கும் இந்நூல் தற்போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களில் தவழுகிறது. 


நம்மை யாரோ எங்கோ தமிழ்கூறும் நல்லுலகில் கரம் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.


நன்றி


தமிழ்திரு. ஷீபா ஆசிரியர் மற்றும் அவரது மகன் ஹெரால்டு நிக்கேஷ்


(குறிப்பு : சில தினங்களுக்கு முன் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர்.தொல்.திருமாவளவன் கைகளில் எனது ''விரிசல்'' நூல் கிடைக்கப்பெற்று ,அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருந்தது குறுப்பிடத்தக்கது.)


பேரன்பின் வழியில்

சோலச்சி அகரப்பட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக