கோடிகளை செலவு செய்து தெருக்கோடிகளில் சாதனை விளக்க கூட்டம்...
ஆண்டவர்களை நம்பியும் பலனில்லை...
ஆள்பவர்களாலும்
பயனில்லை...
எப்போது மீளும் என் தேசம்....
மலிவு விலை கஞ்சிக்கும்
மக்கர் பண்ணும் பொருளுக்கும்
கை ஏந்தி நிற்குது
என் தேசம்.....
வாக்குகளை அடகு வைத்து
வாழ்க்கை நடத்தும்
அவலநிலை
என் தேசத்தில் மட்டுமே ...
இலவசங்களை கொடுத்து
வறுமையை தக்கவைத்து
அரசியல் பிழைப்பு நடத்தும்
இந்த தேசத்தில்
நம் மடமையை கொளுத்துவோம்....
மாற்றத்தை நிலை நிறுத்துவோம்...
-சோலச்சி
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக