புதன், 27 ஜனவரி, 2016

சட்டம் பேசு.... - சோலச்சி

அறந்தாங்கி நாகுடியில் வாசித்த கவிதை .....

"சட்டம் பேசு"

சட்டம் பேசு
நீதி நிலைத்திடவே
நித்தமும்
சட்டம் பேசு...!

எத்தனையோ திட்டமெல்லாம்
போட்டாங்க...
எளியோர் வாழ்க்கை
உயரலையே
ஓட்டு மட்டும்  கேட்டாங்க...!

நாடு சுற்றுவதில்தான்
நம் நாடு  இருக்குது...
காணொளியில்தான்
மாநிலமும் மினுக்குது...!

உழைப்பாளர்
வாழ்வு உயர
சட்டம் பேசு...
அவமதிச்சா
அவர் முகத்தில்
கரிய பூசு...!

இலவசத்தால்
நாடு பிச்சை எடுக்குது...
இருப்பதையும் அரசு
சுரண்டி கெடுக்குது...
உற்பத்திக்கு வழி கேட்டு
சட்டம் பேசு....
உதவலையா
அரசையே தூக்கி வீசு.....!!!

- சோலச்சி
புதுக்கோட்டை

இன்னும் பேசுவேன்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக