வியாழன், 24 செப்டம்பர், 2015

சோலச்சியின் சிதறல்கள்...


¤
வீட்டு வேலையும் விருந்தினர் உபசரிப்பும் காத்திருக்கிறது விளம்பர இடைவேளைக்காக..!
¤
குளங்கள் நிறைந்தன அட... மனைகளால்..!
¤
பட்டாசு ஒலியிலும் பக்குவமாய் ரசிக்கப்படுகிறது மழலையின் சிரிப்பொலி..!
¤
எல்லோரையும் வாழவைக்கிறது தமிழகம்... தமிழனை காவு கொடுத்தபடி..!
¤
இன்னும் நடக்கிறது கிராம வழக்குகளில் நீதிபதியாய் பல்லிகள்..!
¤
நல்ல வருமானத்தில் கடவுள் ஆண்டியாகவே மக்கள்..!
¤
விறுவிறுப்பாய்
நடக்கிறது கல்வி வியாபாரம்..!
¤
எரிந்துகொண்டேதான் இருக்கிறது தவிப்பில் ஆய்வாளர்களும் சாதி..!
¤
எட்டுமணிநேரம் தூங்கணுமாம் உள்ளே நீ உறக்கமின்றி நான்..!
¤
காணாமல் போனது திரிகை மட்டுமல்ல தாத்தா பாட்டியும்தான்..!
-சோலச்சி புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக