செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கண்டனம்

தலித்துகள் தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. பரமக்குடியில் ஆறுபேர் சுட்டுக்கொலை, தர்மபுரி இளவரசன் படுகொலை, தர்மபுரி கலவரம், திருச்செங்கோடு டிஎஸ்பி படுகொலை....,, எங்கே இருக்கிறோம் நாம்..
தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன...
சாதி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு தலித்துகளை படுகொலை செய்வதுதான் வேலையா..
தலித்துகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரசு எடுத்து நடவடிக்கை என்ன?
மேடை போட்டு சாதி வெறியை தூண்டுபவர்களுக்கு துணையாக சாதி இந்து வெறியர்களுக்கு துணையாக அரசு செயல்படுகிறதா?
இதுவரை சட்டத்தால் தண்டிக்கப்படாததன் விளைவுதான் சாதிய இந்துக்கள் தலைதூக்கி ஆடுகிறார்கள்...
தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்..
அரசு நேர்மையாக செயல்படவேண்டும்..
தலித்துகள் தலைநிமிர்ந்திட வேண்டும்..
தமிழக அரசே! சாதிய இந்து வெறியர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக