ஞாயிறு, 13 மார்ச், 2016

தலித் வன்கொடுமை....

      தலித்துகள் தொடர்ந்து தாக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டு  வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கண்டன குரலை பதிவு செய்யவில்லை என்பது வெட்கி தலை குனிய வேண்டிய ஒன்று ....

     பகிரங்கமாக சாதி மாநாடு நடத்துகிறது. நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. அந்த கட்சியோடு கூட்டணி வைக்க பல கட்சிகள் வெட்கமின்றி போட்டியும் போடுகிறது.

     தலித்துகளுக்கு எதிராக செயல்படும் எந்த கட்சி வேட்பாளர்களும் வாக்கு கேட்டு வீதிக்கு வந்தால் விரட்டியடிப்போம். தலித்துகளுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படாத யார் வந்தாலும் துரத்தியடிப்போம்.
   
       சாதிய வன் கொடுமைகளுக்கு எதிராக இன்று வரை எந்த கட்சியும் ஒருதீர்மானம் கூட கொண்டு வரவில்லை.  தலித்துகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என்று அறிவிக்க கூட திராணியற்ற முதுகெலும்பற்ற கட்சிகள்தான் இன்று நம் இந்திய தேசத்தில் ....

     இப்படி இருந்தால் எப்படி உருப்படும் தேசம்....?

    தோழர்களே..... தலித் இனத்தைச் சார்ந்தவர்களும் மனிதர்கள்தான் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்...

        - சோலச்சி
         புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக