வியாழன், 31 மார்ச், 2016

பயணம் ..... - சோலச்சி

   "கடல் பயணத்தில்
    தனியே இயக்கி
    மகிழ்ந்து திரிந்தேன்
    அந்தக் கப்பலில் ....

    நானும் மாலுமிதான்
    என்றபடி
    ஏறிக்கொண்டாய்....!

    நம்பிக்கையோடு
    ஏற்றுக்கொண்டேன்...!

    பயணத்தின் போது
    இயக்கி மகிழ்ந்தாய்
    உன் போக்கில்...!

    பயணம் தொடர்வதெண்ணி
    பின் தொடர்ந்தேன்....!

    பயணத்தின் போது
    பயணியர் இருவர்
    வந்து சேர
    தொடர்ந்தது பயணம் ....!

     காணாமல்
     போய்விடுவாய்
     அவ்வப்போது.....!

     பார்த்திருக்கிறேன்
     பல நேரங்களில் ....!

     இயங்கிக்கொண்டிருப்பாய்
     வேறு சில கப்பல்களில்
     நான் பார்க்கவில்லை
     என்றெண்ணி...!

     எனது கப்பலை
     இயக்கவே
     வேண்டிக்கொண்டேன்
     பல நேரங்களில் ....!

     செவி சாய்த்ததாய்
     தெரியவில்லை ....!

     இப்போதும்
     காணாமல் நீ....!

     எனக்குத் தெரியும்
     ஏதாவது ஒரு கப்பலில்
     இயங்கிக்கொண்டிருப்பாய்..!

     கூட வருவதாய்
     சொன்னதால்தான்
     கூடியிருந்தேன்
     உன்னோடு.....!

     இடமாறும் உன்னை நம்பி
     அல்ல
     எனது கப்பல் ....!

     நடுக்கடலில்
     இப்போது
     நான்....

      அந்த
      பயணியர் இருவருடன்
      கரையை நோக்கி.....!

              - சோலச்சி
                 புதுக்கோட்டை

2 கருத்துகள்: